நாளை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகின்ற வகையில் இந்த நியமனம், கிழக்கு மாகாண ஆளுநரான அனுராதா யஹம்பத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இதற்கமைய அவர் நாளை (01) வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபையில் தனது கடமைகளினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்க இருக்கின்றார் . இவர், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட உறுப்பினருமாவார்.
கல்முனை மாநகர ஆணையாளராக தற்போது செயற்பட்டு கொண்டிருக்கும் ஏ.சீ. அன்சார் அவர்கள் கிழக்கு மாகாண பிரதம செயலாளரினுடைய அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.