பாறுக் ஷிஹான்!
கடந்த செவ்வாய்க்கிழமை (29) அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – கடற்கரைப் பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் நபரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
கடற்கரை பகுதியில் மீட்கப்பட்ட குறித்த மனித உடலை இனங்காண பொதுமக்கள் உதவுமாறு வேண்டுகோளினை அக்கரைப்பற்று பொலிஸார் விடுத்துள்ளனர்.
குறித்த சடலமானது நடுத்தர வயதுடைய ஆண் ஒருவரின் சடலமாகும் இவ்வாறு அக்கரைப்பற்று கடற்கரையில் கரையொதுங்கி உள்ள நிலையில் இதுவரையும் இவரது பெயர், விலாசம் போன்ற எந்த வித தகவலும் எமக்கு கிடைக்கப்பெறாத நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றது.
எனவே இவர் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி காரியாலயத்தினை 074 136 6619 எனும் தொடர்பிலக்கத்தின் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுகின்றது.
குறித்த சடலம் அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் வழமை போன்று கரைவலை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது
மீனவர்களின் வலையில் அகப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் அம்பாறை தடயவியல் பொலிஸ் குழுவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்