ஜனாதிபதியினுடைய கோட்டாபய ராஜபக்ஸ என்கின்ற பேஸ்புக் பக்கத்தின் பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
ஒரு மில்லியனுக்கும் அதிக பின்பற்றுனர்களைக் கொண்ட ஜனாதிபயின் பேஸ்புக் பக்கத்தில், கருத்து தெரிவிப்பதற்கு நேற்று (30) புதன்கிழமை மாலை முதலே தடை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
“2010.01.26ஆம் திகதியில் இருந்து நான் பிரதமர்கள்மறறும்
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகள் ஆகியோரினுடைய பேஸ்புக் கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றேன்.
இதற்கு முன் அவர்கள் யாருமே , அவர்களினுடைய அதிகாரப்பூர்வமான பேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை கட்டுப்படுத்தியதில்லை. எனினும், தற்போது மக்களின் கோபத்தை பிரதிபலிக்கும் வகையில் பேஸ்புகில் அதிகரித்து வருகின்ற பொதுமக்களினுடைய கருத்துகளை அனுமதிக்காத ஜனாதிபதியாகவும் அரசியல்வாதியாகவும் நமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணப்படுகின்றார்” என சமூக ஊடக ஆய்வாராகிய சஞ்சன கத்தொடுவ கருத்து தெரிவித்திருக்கின்றார்.