ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினுடைய இல்லம் அமைந்திருக்கின்ற மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
ஜனாதிபதியினுடைய இல்லத்துக்கு செல்லும் பாதையினை மரித்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன் காரணமாக மிரிஹானவில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதோடு, பதற்ற நிலையும் உருவாகிஇருக்கின்றது. ஜனாதிபதியினுடைய இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதேவேளை ஜனாதிபதி இல்லம் நோக்கி செல்லும் போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து வருகின்றார்கள்.
தற்போது நாட்டு மக்கள் முகங்கொடுத்து வருகின்ற எரிபொருள், கேஸ் மற்றும் மின்சாரம் உள்ளிட்டப் பிரச்சினைகளுக்கு எதிராகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.