மாளிகைக்காடு நிருபர்
பாதைகள், மின்சார வசதிகள், குடிநீர் இணைப்புக்கள் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற மிகப்பின்தங்கிய நிலையில் வசிக்கும் அம்பாறை வீரகெட பிரதேசத்தில் மக்களினது குறைகளை ஆராயும் விஜயமும், அங்கவீனமுற்ற மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு உலருணவுகள் வழங்கிவைக்கும் நிகழ்வும் நேற்று (31) இரவு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனினுடைய தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை சுமத்திராரம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரினுடைய வேண்டுகோளிற்க்கு இணங்க வீரகெட பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களுக்கு வழங்கப்பட்ட உலருணவு பொதிகளுக்கான நன்கொடையினை சுவிஸ்லாந்தில் வசிக்கும் சமூக சேவகி ஒருவர் வழங்கியிருந்தார்.
தொடர்ந்தும் பல வருடங்களாக பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் குறித்த சமூக சேவகி, இந்த பொருட்களை தங்களுக்கு கொண்டுசேர்க்க உதவிய கல்முனை சுமத்திராரம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உட்பட நிவாரண குழுவினருக்கு இன, பிரதேச பாகுபாடுகளின்றி எங்களை தேர்தெடுத்து இந்த உதவிகளை செய்தமைக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக வீரகெட பிரதேச மக்கள் இதன்போது தெரிவித்தார்கள்.
இந்த விஜயத்தின் போது இந்நிவாரண பணிக்கா ன உதவிகளை செய்த குறிப்பிட்ட சமூக சேவகியினுடைய புதல்வர் மாற்று அல் மீஸான் பௌண்டஷனுடைய தவிசாளர் நூருல் ஹுதா உமர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.