நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது கமு/கமு/ அல் – ஜலால் வித்தியாலயத்தில் இயங்கி வருகின்ற முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விழா நேற்று (31) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக யஹியாகான் பௌன்டேசன் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளருமாகிய ஏ.சி.யஹியாகான் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு பணப் பரிசில்களுடன் சிறப்பு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
மேலும் சிறப்பு நடனமொன்றினை வழங்கிய மாணவி ஒருவருக்கு பணப் பரிசிலையும் யஹியாகான் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கமு/கமு/ அல் – ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.எம். ஸைபுதீன், பிரதியதிபர் ரீ.கே.எம். சிராஜ் உட்பட பகுதித் தலைவர் எம். மாஹிர் மற்றும் ஆசிரியர்களான ஏ. ஷியாம், எம்.எம்.அமான் மற்றும் பாலர் பாடசாலையின் ஆசிரியைகள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர் .