இன்று மாலை வேலையில் தொழில் முடிந்து மற்றும் நீண்ட நேரம் பயணிக்கும் மக்கள் தகுந்த ஆதாரங்களை காட்டி பயணிக்க முடியும் எனவும், அநாவசிய போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாளைய தினத்தில் முழுமையாக ஊரடங்கு சட்ட விதிமுறைகள் அமுல்படுத்தப்படுமெனவும், பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹல் தல்துவ குறிப்பிட்டுள்ளார்