மாளிகைக்காடு நிருபர்
மாவடிப்பள்ளி அல்- மதினா பாலர் பாடசாலையினுடைய பவளவிழாவடன் இணைந்ததான மாணவர்கள் விடுகை நிகழ்வானது இன்று (02) மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூட்டத்தில் அப்பாலர் பாடசாலையின் பணிப்பாளரான எம்.எச். எம். அஸ்வர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியினுடைய அம்பாறை மாவட்டத்தின் அமைப்பாளர் பொறியியலாளர் கயந்த தர்சன, கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையினுடைய பணிப்பாளரும், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமாகிய யூ.எல்.என். ஹுதா உமர் மற்றும் முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தரான ஏ.ஜெஸ்மிர் மற்றும் கலாச்சார உத்தியோகத்தரான ஜே.கே. ரஷீத், ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.எம். மனாப் உட்பட பாலர் பாடசாலை அதிபர், ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாலர் பாடசாலையினுடைய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், அவர்களுக்கான கௌரவிப்பும், 25 ஆண்டு நிறைவுவிழா நிகழ்வும் இதன்பொது நடைபெற்றது.