நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்.வித்தியாலயத்தின்) புலமைப் பூக்களுக்கு புகழாரம் சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம். ஐ.எம் இல்யாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை மாளிகைக்காடு பாவா ரோயல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், கல்வி வலயத்தின் பிரதம கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.என்.மலீக், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட கல்விமான்கள் புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஜீ.எம்.எம்.எஸ்.வித்தியாலயத்திலிருந்து 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய 16 மாணவர்கள் உட்பட அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.