இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட பல போராட்டங்களுக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர்.
மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் மற்றும் பெர்த் ஆகிய நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மெல்பேர்னில் உள்ள இலங்கையர்கள் தற்போது பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.