நாளை (04) திகதி முதல் வடக்கு மற்றும் தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாடசாலை மாணவர்களுக்காக விடுமுறை வழங்கப்படவிருக்கின்றது.
கல்வி அமைச்சினுடைய செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனைத் அறிவித்துள்ளார்.
எவ்வாறிருந்தாலும், குறித்த மாகாணங்களில் உள்ள பாடசாலைகளினுடைய ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளிப்பது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதுமட்டுமல்லாமல், ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலை மாணவர்கள் தவணைப் பரீட்சைக்கு மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சினுடைய செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.