இலங்கையின் ஜனாதிபதியினை கோட்டாபய ராஜபக்சவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் எதிராக இன்று நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் வலுத்துள்ளன.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதியினை பதவி விலகுமாறு கோரி பொதுமக்கள் பல பிரதேசங்களில் அமைதியான முறையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியினை வெளிப்படுத்தும் வகையில் இன்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், நான்கு பேர் கொண்ட தற்காலிக அரசாங்கத்தை நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் போது பல முன்னணி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வீடுகளும் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டன.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதியுடன் இணைந்து அவர்களையும் பதவி விலகுமாறு கோரி பொதுமக்கள் அரசாங்க அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலையில் உள்ள தனிப்பட்ட இல்லம், அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல, காமினி, லொக்குகே ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜேசேகர, ரொஷான் ரணசிங்க நிமல் லான்சா மற்றும் ஜனக பண்டார தென்னகோன் ஆகியோரின் வீடுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்திற்குள் இருந்த போது, போராட்டக்காரர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.