(சர்ஜுன் லாபீர்,எம்.என்.எம் அப்றாஸ்)
நாட்டினுடைய தற்போதையா பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் பாரிய கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கும் எதிராக நாட்டினுடைய பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையினுடைய வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களினால் இன்று (6) பகல் 12.00 மணிக்கு பகல் உணவு நேர தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுதந்திருந்தனர்.
வைத்தசாலைக்கு முன்னாள் உள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வைத்தியர்கள் தாதிமார்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிற்றுளியர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை காட்டியதோடு சுகாதார வசதிகளை இல்லாதொழிக்க வேண்டாம் மற்றும் நோய்யுற்றவர்களை காப்பாத்துங்கள் மற்றும் இலவச சுகாதாதத்த்தை இல்லாதொழிக்க வேண்டாம்மற்றும் நிதி நெருக்கடியால் உயிர்களை கொல்லாதே மற்றும் சுகாதாரத்திற்கான பண ஒதுக்கீட்டில் கை வைக்காதே மற்றும் களவெடுத்த பணத்தை திரும்பி கொடு மற்றும் அத்தியாவசிய மருந்துகளை தடுக்காதே மற்றும் GO HOME GOTA, வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு மற்றும் ஆட்சி செய்து கிழித்தது போதும் மற்றும் குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக மற்றும் பெற்றோல் இல்லை டீசல் இல்லை போன்ற கோசங்களையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.