எதிர்வரும் சில மணித்தியாலங்களில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்கவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்றிரவு இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது,
அலரிமாளிகையில் நேற்றிரவு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
நாடு எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாடு எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழ்நிலைக்கான தீர்வு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவிக்கின்றார்.