இலங்கையின் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்று ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான பொது ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வீதியில் இறங்கினர்.
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கறுப்பு ஆடை அணிந்து கொழும்பு லிபர்ட்டி ரவுண்டானாவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பதாகைகளை ஏந்தியவாறும், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு காணப்பட்டனர்.