இந்தியாவில் வீடற்ற ஏழை ஒருவர், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு உதவியாக பிச்சை எடுத்து பெற்ற 20,000 ரூபாயை வழங்க முன்வந்துள்ளார்.
விசாரணையில் அந்த நபர் தூத்துக்குடி ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டியன் எனத் தெரியவந்தது.
பிச்சை எடுப்பதன் மூலம் அவர் பெறும் பணத்தைச் சேமித்து, பல்வேறு தகுதியான காரணங்களுக்காக நன்கொடைகளை வழங்குவதில் அவர் புகழ்பெற்றவர்.
முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு தனது சேமிப்பிலிருந்து 10,000 ரூபாயை பலமுறை வழங்கியுள்ளார்.
பூல்பாண்டியன் தனது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இதுவரை 400,000 ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளார்.