இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஆகியவை ஏப்ரல் புத்தாண்டை முன்னிட்டு விசேட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
PUCSL ஏப்ரல் 13 முதல் 17 வரை மின்வெட்டு அட்டவணையை அறிவித்துள்ளது.
புத்தாண்டு தினமான ஏப்ரல் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ரத்நாயக்க தெரிவித்தார்.
இரு தினங்களிலும் காலை 08.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரண்டு மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அடுத்த மூன்று நாட்களுக்கு எரிபொருள் விநியோக தடைகளை அறிவித்துள்ளது.
ஏப்ரல் 12 முதல் 14 வரை பீப்பாய்கள் மற்றும் கேன்களுக்கு எரிபொருள் நிரப்பப்படாது என்று சிபிசி தெரிவித்துள்ளது.
பீப்பாய்கள் மற்றும் கேன்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் வழங்க மாட்டோம் என்றும் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோலிய சேமிப்பு கிடங்கில் போதிய எரிபொருள் இருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிபிசி மேலும் தெரிவித்துள்ளது.