இலங்கையில் உள்ள பல அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.
மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பல தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்த அரசாங்க தகவல் திணைக்களம் அந்த அறிக்கையை மறுத்துள்ளது.
அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக திணைக்களம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் அரச வைத்தியசாலைகளில் குறிப்பாக மேல் மாகாணத்தில் தற்போது கையிருப்பில் உள்ள அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களின் பட்டியலை மேலும் வெளியிட்டுள்ளது.