ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைமையகத்திற்கு வெளியே கட்சி உறுப்பினர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைமையகத்தை விட்டு வெளியேறும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் குழுவொன்று கட்சித் தலைமையகத்தைச் சுற்றி வளைத்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல், எதிர்கால நடவடிக்கை குறித்து கட்சி உறுப்பினர்களை ஆதரவாளர்கள் எதிர்கொண்டதால் பதற்றமான சூழ்நிலையில் முடிவடைந்துள்ளது.
ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு தமது வாக்குகளை காட்டிக் கொடுக்க வேண்டாம் எனவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவாக செயற்படுமாறும் கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை, ஜனாதிபதியுடன் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயேச்சைக் குழு புறக்கணிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலை புறக்கணிக்க 11 அரசியல் கட்சிகளின் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் சாந்த பண்டார நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக நேற்று நியமிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.