ஜனநாயகத்திற்காகவே இளைஞர்கள் வீதியில் இறங்கியுள்ளதாகவும், அவர்களின் போராட்டத்தை சரியாக புரிந்து கொள்ள முன்வர வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இராணுவ வீரர்களை முன்னிலைப்படுத்தி உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும், யுத்தத்தில் வெற்றி பெற்ற சரத் பொன்சேகா உள்ளிட்ட வீரர்களை பழிவாங்கியது யார் என்பது உலகுக்குத் தெரியும் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இராணுவ வீரர்களின் கௌரவத்தை காட்டிக்கொடுத்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.