சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
அடுத்த வாரதில் 200 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைமயில், அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் திருப்பிச் செலுத்துவதைய இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. இந்த விடையம் நாட்டின் வங்கித் துறைக்கு மேலும் அழுத்தத்தினை ஏற்படுத்தும் முடிவாகும், நாடு திவாலாகிவிட்டது என்ற அரசினுடைய அறிவிப்பாகும்.
இப்போது வாஷிங்டனுக்குச் சென்று, IMF உடன் நிலவும் சூழ்நிலையைப் பற்றி விவாதிக்கும் பொறுப்பு புதிய நிதியமைச்சரிடம் இருக்கின்றது.
மே மாதத்தின் நடுப்பகுதிக்குள் இந்திய கடன் வரி முடிவடையும். ஜூன் மாதத்திற்குள் அந்நியச் செலாவணி பற்றாக்குறைவினால் தனியார் வணிகங்கள் செயல்பட முடியாத நிலை. நாட்டின் திவால்நிலைக்கு இந்த அரசாங்கம் முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
அவர்கள் இப்போது மற்றைய அனைத்து அரசியல் கட்சிகளுடன் எந்த நிபந்தனைகழும்மின்றி ஈடுபட வேண்டும். கடந்த கிழமை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி என்கின்ற வகையில் தோல்விக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தோம். எவ்வாறாயினும், இந்த கட்டத்தில் தேர்தலோ அல்லது அரசியலமைப்பு திருத்தங்களோ நாட்டின் நெருக்கடியை தீர்த்துவைக்காது.
அரசாங்கத்துடன் கலந்துரையாடி ஒரு திட்டம் வகுக்கப்பட்டதிற்கு பின்னர் நிபந்தனைகளை வகுக்க முடியும். அனைவருக்கும் சம உரிமை வழங்குவது நமது பொறுப்பாக இருக்கின்றது.
லெபனானில் IMF ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் அவர்களின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படும்போது அவர்கள் மீது நம்பியிருந்தது. இது இலங்கையிலும் நடக்க வேண்டும். நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம். திவாலான நாடாக இந்த ஆண்டை முடிக்கிறோம்.
இருந்தாலும், இந்த நெருக்கடியினை நம்மால் தீர்த்து கொள்ள முடியும். அதற்கு தேசிய அளவிலான முயற்சிகள் தேவைப்படும். நங்கள் ஒரு கடினமான காலகட்டத்தினை எதிர்கொள்ள இருக்கின்றோம், ஆனால் நாம் அதை எதிர்கொள்ள வேண்டும். இந்த நெருக்கடியை சமாளித்து நமது பொருளாதாரத்தினை வலுப்படுத்த முடியும். ஆனால் நாம் ஒன்றிணைந்து ஒரு திட்டத்தினை முன்னெடுத்து செயல்பட்டால் மட்டுமே இதைச் செய்து முடிக்க முடியும்.
இப்போது திவாலான தேசமாக இந்த ஆண்டை முடிப்போம், ஆனால் புதிய ஆண்டினை ஒரு புதிய பயணத்துடன் தொடங்குவோம்.
அனைவரும் ஒன்றிணைந்தால் இது சாத்தியமாகும். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ரணில் விக்கிரமசிங்க
முன்னாள் பிரதமர்