போராட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேவைப்பட்டால் அந்த அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக குறித்த அதிகாரி அனுமதியின்றி சிறிபாகம பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.