அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையை சமாளிக்க பல நடவடிக்கைகளை அரசு எடுத்திருப்பதாக இவ் அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.
சில அரசு மருத்துவமனைகளில் சில மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கும் பற்றாக்குறை உள்ளது, மேலும் பற்றாக்குறையை நிர்வகிப்பதற்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்களை தடையின்றி வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நாணயத்தை கண்டுபிடிப்பதில் உள்ள சிரமத்திற்கு மத்தியில் கடன் கடிதங்களை சரியான நேரத்தில் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால் சில மருந்துகளின் விநியோகத்தில் பற்றாக்குறைகள் ஏற்பட்டிருப்பதாகவும். அதற்கான பல தீர்வுகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும், அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றனவாகவும் குறிப்பிடட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் ஒன்று தான், இந்தியக் கிரெடிட் லைன் வசதியின் கீழ் கடன் கடிதங்களைத் திறந்து மருந்துகள் மற்றும் உபகரணங்களை ஆர்டர் செய்வதாகும். இரண்டாவதாக உலக வங்கியிடமிருந்து மருந்துகளை வாங்குவதற்காக பெறப்பட்ட 10 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி. மற்றும், உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ஆகியவற்றுடன் அமைச்சகம் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது.
இதனிடையே, சர்வதேச முகவர் நிலையங்கள், வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களிடம் நன்கொடைகள் அல்லது அத்தியாவசிய மருந்துகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. அது தொடர்பில் ஏற்கனவே சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அதற்கேற்ப திருத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. உத்தியோகபூர்வ ஆதாரத்தை மேற்கோள் காட்டி குறிப்பிட்ட செய்திக்குறிப்பு, அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.