நூருள் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட மக்களுக்கு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ பொதி வழங்கும் செயற்றிட்டம் கல்முனையன்ஸ் போரமினால் வெள்ளிக்கிழமை (15) உத்தியோகபூர்வமாக கல்முனையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கல்முனையன்ஸ் போரத்தின் செயற்பாட்டாளர் முபாரிஸ் எம். ஹனீபா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனையன்ஸ் போரமானது விடுத்த வேண்டுகோளுக்கமைய 6000 கிலோகிராம் பேரிச்சம்பழ தொகுதியினை பெஸ்ட் புட் மார்க்கெடிங் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தினர் நன்கொடையாக வழங்கியிருந்தனர்.
குறித்த இப் பேரீச்சம்பழமானது அம்பாறை மாவட்டத்திலிருக்கின்ற சகல பிரதேசங்களிளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் அமைப்புக்களினுடாக இணங்கானப்பட்ட பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன.
நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட அம்பாறை மாவட்ட பிரதேசங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் கல்முனையன்ஸ் போரத்தின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.