கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று (16) 8ஆவது நாளாகவும் தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்களினது பங்குபற்றுதலுடன் சென்ற த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டமானது ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுகத்திடல் போன்ற பகுதிகளில் இரவு பகல் பாராது நடைபெற்று வருகின்றது.
இத் தனை நாட்களும் இல்லாத வகையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்ட பகுதியில் பொலிஸ் மற்றும் ராணுவ வண்டிகள் அதிகளவில் நிறுத்த பட்டிருப்பதானது சந்தேகதகத்தினை ஏற்படுத்துகின்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றது.