சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இலங்கைக் குழு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 17) அதிகாலை செல்லவுள்ளது.
ஏப்ரல் 19 முதல் 24 வரை அமெரிக்காவின் வாஷிங்டனில் பேச்சுவார்த்தைகள் நடைபெற இருக்கின்றது.
நிதி அமைச்சருடன் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் செல்லவுள்ளனர்.