மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அமைச்சரவையில் முன்வைக்க உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்றுத்துறை, சட்டமன்றம் மற்றும் நீதித்துறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தத்தை பிரதமர் அமைச்சரவைக்கு முன்மொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருத்தப்பட்ட அரசியலமைப்பு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும் என பிரதமர் எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினரின் அழைப்புகளுக்கு செவிசாய்த்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயம் தொடர்பில் தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.