முன்னாள் நிதியமைச்சரான பஷில் ராஜபக்ஷவினுடைய மனைவி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினுடைய மனைவி அயோமா ராஜபக்ச ஆகியோர்கள், இலங்கை மக்களினுடைய நிதியினை பயன்படுத்தி அமெரிக்காவில் தங்கள் பெயர்களில் சொத்துகளை சேகரித்துள்ளதாகவே இவ்வாரு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவினுடைய FBI (Federal Bureau of Investigation) நிறுவனத்திடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டிருக்கின்றது.மேலும் அவர்களால் சேகரிக்கப்பட்டிருக்கின்ற சொத்துகளது விபரங்களை விசாரித்தபோது அவர்களுக்கு நிரந்தரமான எந்தவித வருமானமும் கிடைப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
எனவே, இது தொடர்பாக பக்கசார்புகளற்ற விசாரணைகளினை முன்னெடுப்பதோடு, உரிய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்து, FBI நிறுவனத்திடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.