ஈஸ்டர் தாக்குதலுக்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தனவே பொறுப்பு என ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முன்னைய தகவல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு திரு.நிலந்த ஜயவர்தனவே பொறுப்பு என திரு.மோகன் வீரகோன் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.சில்வாவும் கலந்துகொண்டார்.