எரிபொருள் வழங்கக் கோரியும், எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும் நாட்டின் பல பகுதிகளில் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனால், கீழ்க்கண்ட பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
எரிபொருள் கோரி போராட்டம் காரணமாக சிலாபம் – கொழும்பு வீதி காக்கப்பள்ளி மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளில் இருந்து தடைப்பட்டுள்ளது.
எரிபொருளை பிரச்சினையினை வழியுறுத்தி முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தின் காரணமாக மலையகத்தின் ரயில் பாதையானது ரபுக்கன பிரதேசத்த்துசடன் தடைப்பட்டிருக்கின்றது.
கண்டி தொடக்கம் கொழும்பு என்று பல பகுதிகளில் தனியார் பேருந்துகள் இயங்காமல் இருக்கின்றன.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக ஹிங்குராங்கொட, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை, மத்துகம மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக நியூஸ் ஃபர்ஸ்ட் தெரிவித்துள்ளது.