ரம்புக்கனையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிசார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் (IGP) தெரிவித்துள்ளார்.
30,000 லீற்றர் எரிபொருளைக் கொண்ட பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைப்பதைத் தடுப்பதற்காக பொலிசார் குறைந்தபட்ச பலத்தை கையாண்டதாக பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது பொலிசார் அதிக பலத்தை பயன்படுத்தினார்களா என்பதை அறிய பொலிஸ் தலைமையக மட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
எரிபொருளைக் கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இதற்கிடையில், ரம்புக்கனையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீயை பொதுமக்கள் அணைக்க முற்படுவதை ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பகிர்ந்துள்ள காணொளி காட்சிகள் காட்டுகின்றன.