இன்று முதல் அமுலாகின்ற வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டுமொரு ,முறை கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது.
நாடளாவிய ரீதியாக பெருந்தொகையிலான மக்கள் தற்போது ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தன இதனை அறிக்கை மூலம் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த 18ஆம் திகதி முதல் பொது இடங்களில் முகக்கவசங்கள் அணி தேவையில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
இந்த சூழ்நிலையில், குறிபிட்ட அத் தீர்மானம் தற்போதைய சூழலில் ஏற்புடையதனதாக இல்லை என பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருந்தனர்.
ஆகவே, இத் தீர்மானத்தினை மீளாய்வுக்குட்படுத்துமாறு நிபுணதத்துவ குழுவுக்கு சுகாதார அமைச்சரான சன்ன ஜயசுமன ஆலோசனையினை வழங்கியிருருக்கின்றார்.
அதனாலையே, மேற்கொள்ளப்பட்டிருந்த மீள்பரிசீலினைக்கு அமைய பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.