ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
முன்னதாக, பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.
எனினும், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை.
முன்னாள் நிதியமைச்சரான பசில் ராஜபக்ஷ அவர்கள் நாட்டை விட்டு தப்பி சென்றதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆனாலும் பல்வேறு பட்ட செய்திகளுக்கும் மத்தியில் அவர் இன்றைய தினம் குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்.