பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தொடர்ந்தும் ஆட்சி நடத்துவதற்கான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற அரசாங்கத்தின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இந்த யோசனை நிறைவேற்றப்பட்டதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரசாங்கத்தை அமைப்பது அத்தியாவசியமானது என பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் முன்மொழிந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த பிரேரணை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.