இலங்கையை சேர்ந்த 18 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
மன்னாரை சேர்ந்த 13 பேர் இரண்டு படகுகளில் தனுஷ்கோடியை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மூன்று குடும்பத்தை சேர்ந்த நபர்களே தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளதாகவும், அவர்களிடம் Q-பிரிவு பொலிஸார் விசாரணையினை முன்னெடுத்துவருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் மண்டபம் கடலோர பொலிஸ் நிலையத்திற்கு இவர்கள் அனைவரும் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இதனைப்போன்று , யாழ்ப்பாணம்மற்றும் நீர்வேலியினை சேர்ந்த மேலும் 5 நபர்கள் தமிழகத்தை சென்றடைந்திருக்கின்றனர்.
அதற்கமைய, நேற்று மாத்திரம் 18 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியின் காரணமாக சென்ற மாதம் 22 ஆம் திகதியில் இருந்து நேற்று வரையான காலப் பகுதிக்குள் சுமார் 60 இலங்கையர்கள் தமிழகத்திற்கு சட்டவிரோதமாக படகில் சென்றறிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.