அரசுக்காக ஆதரவளித்து தற்போது அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஹாபீஸ் நசீர் அஹ்மத்தை கட்சியினுடைய உறுப்புரிமை மற்றும் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய உயர்பீடம் தீர்மானித்திருக்கின்றது.
இன்றைய தினம் மாலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடைய தலைமையில் இடம்பெற்றஉயர்பீட உறுப்பினர்களுடனானே கூட்டத்தின் போதே குறித்த இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாகவே அரசுக்காக ஆதரவளித்து பின்னர் அதிலிருந்து வெளியேறிய மற்றைய பாராளுமன்னற உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணையினை முன்னெடுக்கவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.