நூருல் ஹுதா உமர்
அதிமேதகு ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவின் கீழ் தேசிய “கமசமக பிலிசந்தர” வேலைத்திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) அவர்களின் தலைமையில் வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.
“கமசமக பிலிசந்தர” வேலைத்திட்டத்தினால் இறக்காமம் பிரதேச செயலக 12 பிரிவுகளில் 05 வேலைத்திட்டங்கள் என்கின்ற அடிப்படையில் 84 வேலைத்திட்டங்களை செய்துவருகின்றது.
2022 க்கான வரவு செலவுத்திட்டன் நிதி ஒதுக்கீட்டினால் மக்களுக்கு அபிவிருத்தியின் பயன்கள் விரைவாக சென்றடையும் வகையில் இக் கிராம மட்ட பிராந்திய அபிவிருத்திகளுக்காண முன்னுரிமை வழங்கி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இவ் அபிவிருத்தி கருத்திட்டங்கள் பின்வரும் பிரிவுகளின் கீழ் செயற்படுத்தப்படயிருக்கின்றது.
- வாழ்வாதார அபிவிருத்தி – 40%
- பொது உட்கட்டமைப்பு அபிவிருத்தி – 40%
- சுற்றாடல் மற்றும் நிலையான அபிவிருத்தி – 10%
- சமூக நலன்கள் மற்றும் சமூக அபிவிருத்திக்கான – 10%
இதனடிப்படையில் இராஜங்க அமைச்சர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷார்ரப் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரின் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இத்தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் உதவி பிரதேச செயலாளரான எம்.ஏ.சி. நஸீல் மற்றும் கணக்காளர் திருமதி றிம்ஷியா அர்சாட், மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், திட்டமிடல் பிரிவு சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தரான யூ.எல். ஆஹிர் மற்றும் இராஜங்க அமைச்சர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷார்ரப் அவர்களது இணைப்பாளரான எஸ்.எல்.எம். ரஜா உட்பட அவ் பிரிவுகளுக்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.