ராஜபக்சக்களுடன் இணைந்துள்ள எந்தவொரு கூட்டு அரசாங்கத்திலும் சமகி ஜன பலவேகய (SJB) அங்கம் வகிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் இன்று (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எஸ்.ஜே.பியின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுமார் 150 பாராளுமன்ற ஆசனங்களுடன் இரண்டரை வருடங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அரசாங்கம் தற்போது பிரதமர் பதவி மற்றும் அமைச்சுப் பதவிகளை வழங்கிக் கூட்டரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றது.
ஆனால் நாங்கள் இரகசியமாக அரசாங்கத்தை அமைக்கத் தயாராக இல்லை. மக்கள் ஆணையின் மூலம் ஆட்சி அமைக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.
இந்த நாட்டை அழித்த ராஜபக்சக்களுடன் ஒப்பந்தம் போடுவதை விட அரசியலில் இருந்து விலகி வீட்டுக்கு செல்வதே மேல் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.