எதிர்வரும் வாரம் சீமெந்து மூட்டைகளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட வேண்டும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் உயர்வின் காரணமாக சீமெந்து பொதிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அதிகரிக்கப்பட வேண்டிய தொகையை நிர்ணயிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டை ஒன்றின் தற்போதய விலை 2,350 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு பாரிய அசௌகரியம் ஏற்படாத வகையில் விலையை உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது.