இலங்கைக்கான வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் 2022 மார்ச் மாதத்தில் சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது.
பெப்ரவரி மாதமளவில் 205 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கை தொழிலாளர்களினுடைய பணம் மார்ச் மாதத்தில் 318 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருக்கின்றது.
மார்ச் 2021 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 612 மில்லியன் அமெரிக்க டாலர்களை விட இந்த தொகை இன்னும் குறைவாக உள்ளது.
மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து இலங்கை ரூபாயை மிதக்க மத்திய வங்கி தீர்மானித்ததை அடுத்து இந்த சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.