பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பெரும்பான்மை இல்லையெனவும், பிரதமர் சிறுபான்மை ஆதரவைக் கொண்டவர் என்பதை நிரூபித்துள்ளதாகவும் கூறி, எம்.பிக்கள் கையொப்பமிட்டு, சபாநாயகரிடம் சத்தியக்கடதாசியினை கையளிக்கவிருக்கின்றனர்.
இச்சத்தியக்கடதாசியில் கைச்சாத்திட இணக்கம் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 115 தினை கடந்துவிட்டதாகவும் அறியமுடிகின்றது.
அது மட்டும்மல்லாமல் , கையொப்பம் இடுகின்ற சத்தியக்கடதாசியினையும், அடுத்தவாரத்திற்குள்
சபாநாயகரிடம் கையளிக்கப்பட இருப்பதாக தெரிகின்றது.
இந் நிலையில், பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலக வில்லை என்றால், அவருக்கு எதிராக நாம் நம்பிக்கை இல்லா பிரேரணையில் கையொப்பம் பெறுகின்ற நடவடிக்கையில், நாளை (25) திங்கட்கிழமையில் இருந்து முதல் ஆரம்பிக்கப்படவுள்ள தாகவும் தெரியவருகின்றது.
இவ் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி, தற்போது எதிரணியில் சுயாதீனமாக இயங்குகின்ற குழுவும் ஆதரவளிக்க தீர்மானித்திருப்பதாக அறியமுடிகின்றது.
குறித்த கையொப்பம் பெறப்பட்டதன் பின்னர், அவ் நம்பிக்கையில்லாப் பிரேரணையினை, வருகின்ற பாராளுமன்றத்தின்னுடைய முதலாவது பகுதி கூட்டத்தின் நாளிலேயே அதனை கையளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை தெரியவருகின்றது.