நாட்டில் பொது போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளை வழமையாக முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்நிலையில், நாட்டின் முக்கிய சேவையாக கருதப்படும் பொது போக்குவரத்து, அம்புலன்ஸ், பாடசாலை வாகனங்கள், அலுவலக சேவைகள், அத்தியாவசிய சேவை போக்குவரத்து ஆகியவற்றை தடையின்றி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வாகனங்களின் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொலிஸாருக்கு இந்த பணிப்புரை விடுத்துள்ளார்.