தற்போதைய நிலைமை குறித்து முப்பெரும் பீடாதிபதிகள் அனுப்பிவைத்த கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதிலளித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் வண.மெதகம தம்மானந்த தேரர் தனியார் ஊடகமொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
“நாட்டில் இடைக்கால அரசாங்கத்த்தினை அமைப்பதிற்கு தாம் சம்மதிகின்றேன் என்றும், பொருளாதார நெருக்கடியினை தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கையினை எடுப்பதாகவும் ஜனாதிபதியின் பதில் கடிதத்தில் முப்பெரும் பீடாதிபதிகளுக்கு எழுதியுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துமாறு கடந்த வாரம் அறிக்கையொன்றில் பிரதம தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு வழங்கப்படாவிடின் ‘சங்க மாநாட்டை’ பிரகடனப்படுத்துவோம் என பிரதம பீடாதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
அடுத்ததாக 20 வது அரசியலமைப்பு திருத்தத்தினை நீக்கி 19வது அரசியலமைப்பு திருத்தத்தினை மீண்டும்நாட்டில் கொண்டு வர வேண்டும் எனவும்குறித்த தேரர்கள் கோரிக்கையினையும் விடுத்துள்ளனர்.