அரச சேவைகளின் செலவீனங்களைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
5 அம்ச சுற்றறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சகம், அரசின் செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் முறையை வலியுறுத்தியுள்ளது.
திட்டச் செலவுகள், எரிபொருள் குறைப்பு, தகவல் தொடர்புச் செலவுகள், நலன்புரி மற்றும் நிவாரணச் செலவுகளை இடைநிறுத்துதல், அரசுத் துறை ஆட்சேர்ப்பு போன்ற பல அரசுச் சேவைச் செலவுகளைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சகம் அழைப்பு விடுக்கிறது.