பொருளாதாரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் தனித்தனியாக எரிபொருளை இறக்குமதி செய்து பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் பெட்ரோலிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் எரிபொருள் இன்றியமையாதது எனத் தெரிவித்த அரசாங்கம், பொருளாதாரத்தின் குறிப்பிட்ட துறைகளுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும் தனித்தனியாகப் பயன்படுத்துவதற்கும் உரிமம் வழங்குவது பொருத்தமானது என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், பொருளாதாரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் தனித்தனியாக தமக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்து பயன்படுத்த அனுமதிப்பதற்கான உரிமங்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெட்ரோலியப் பொருட்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கான சட்ட வரைவை உருவாக்குவதற்கு சட்ட வரைவாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.