பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர சபையினுடைய 2022ஆம் ஆண்டுக்கான 49 ஆவது சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை(26) மாலை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது, இச்சபை அமர்வின் போது முதலில் சமய ஆராதனை துவங்கியது.
தொடர்ந்து சென்ற மாத 2022.03.23 அன்றைய திகதி கூட்டறிக்கையினை உறுதிப்படுத்தல், முதல்வரின் உரை மற்றும் நிலையியற் குழுக்கூட்டத் தீர்மானங்களை சமர்ப்பித்தல்,போன்றன நடைபெற்றன.
அதோடு உறுப்பினர்களான மீராசாகிப் அப்துல் றபீக், அப்துல் ரஹ்மான் அமீர் ஆகியோரினது பிரேரணைகளும் முன்மொழியப்பட்டதோடு முதல்வரின் ஏனைய அறிவுறுத்தல்களுடன் சபை கூட்டம் நிறைவடைந்தது.