2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ரம்புக்கனையில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு (IGP) உத்தரவிட்டுள்ளது.
ரம்புக்கனையில் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த லக்ஷன் உயிரிழந்துள்ளார்.
ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட பொலிஸாரினை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கேகாலை நீதவான் வாசன நவரத்ன பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் உயிரிழந்தவரின் மரணம் கேகாலை வைத்திய அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ரம்புக்கனையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.