இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் நாளை (28) வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
திட்டமிட்டப் பட்ட குறித்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் இருக்கின்ற பல அரசாங்க மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் எனவும் தொழிற்சங்கம் கூறியுள்ளது.
இவ் வேலை நிறுத்தப் போராட்டமானது நாளை காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மேலும் அறிவித்துள்ளது.
தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கியும் வேலைநிறுத்தம் காரணமாக அதன் பல சேவைகளை கட்டுப்படுத்தும் முடிவை அறிவித்துள்ளது.
அரச துறை , அரை அரசு சார்ந்த துறைகள், தனியார் துறைகள் மற்றும் தோட்டத் துறைகளைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராகபாரிய அளவிலான குறித்த வேலைநிறுத்தப் போராட்டத்த்தினை அறிவித்திருக்கின்ற நிலைமையில் வங்கித் துறையும் இவ் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்திருக்கின்றது.