பாறுக் ஷிஹான்
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கான உரிய தீர்வினை விரைவாகப் பெற்றுத்தருமாறு அரசை கோரி நாடு பூராகவும் பல அரச தனியார் துறை தொழிற்சங்கங்களுடைய ஒன்றிணைந்த பணிப்பகிஷ்கரிப்பு
போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த போராட்டமானது இன்று வியாழக்கிழமை (28) அம்பாறை மாவட்டத்தினுடைய கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில், நிந்தவூர் மற்றும் அம்பாறை நகர் பகுதி, நாவிதன்வெளிமற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் ணிப்பகிஷ்கரிப்பு
போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அரச நிறுவனங்களாகிய பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களினுடைய ஊழியர்களின் வரவு இன்று வழமையிணை விட மிகவும் குறைவான அளவாக காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இங்கிறுக்கின்ற அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்களினதும் மற்றும் மாணவர்களினதும் வருகையானது மந்த நிலையில் காணப்படாது அத்துடன் சில பாடசாலைகள் பாடசாலைகளும் மூடப்பட்டுமிருந்தன.
சில இடங்களிளுள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் இரண்டு மணித்தியாலங்களாக வேலைநிறுத்ததினை மேற்கொந்ந்திருந்தார்கள்.
இது தவிந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள பொதுமக்களினுடைய நடமாட்டமும் வழமையிணை விட மிகக்குறைந்த அளவில் காணப்பட்டமையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டிய விடையமாகும்.
பாதுகாப்பு கடமையில் பாதுகாப்பு தரப்பினரும் ய ஆங்காங்கே ஈடுபட்டுள்ளனர்.அதுமட்டுமல்லாமல் இங்கிறுக்கின்ற வைத்தியசாலையினுடைய தாதிகள் மற்றும் வைத்தியர்கள், ஊழியர்கள் .இணைந்து அரசினுடைய செயற்பாட்டினை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்கள்.
இச் சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழகங்களினுடைய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினுடைய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய ஊழியர்களும் அரசாங்கத்தின் இச் செயற்பாட்டை கண்டித்து ஒரு நாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பினை இன்று நடாத்திஇருந்தார்கள்.