தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றுவதற்கான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் பதவி நீக்க பிரேரணை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இரண்டு பிரேரணைகளும் அடுத்த சில நாட்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக SJB முன்னெடுத்துள்ள பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியானது கொழும்பு நோக்கிச் சென்று எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.